ஒருவர் கடமையான (பர்ழான) அல்லது நப்லான- நோன்பு நோற்று இருக்கும் நிலையில் மறதியாக சாப்பிட்டால் அல்லது ஏதாவது பானத்தை குடித்து விட்டால் அவர் நோன்பை விட்டுவிடாது அதனைப் பூரணப்படுத்தல் வேண்டும்; ஏனெனில் இது அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவருக்குக்கு கிடைத்த உணவாகும். இந்த வகையில் அல்லாஹ்வே அவருக்கு உணவளித்து குடிக்கக் கொடுத்தான் என நபியவர்கள் இந்த ஹதீஸில் தெளிவுபடுத்துகிறார்கள்.