அல்லாஹ் சில விடயங்களை கடமையாக்கி அதனை கட்டாயப்படுத்தியுள்ளான். எனவே அவற்றைப் பின்பற்றுங்கள். அவற்றை பின்பற்றாது அலட்சியமாக இருப்பதன் மூலம் அவற்றைப் புறக்கணிக்காதீர்கள். அதே போன்று சில தடைகளை விதித்துள்ளான் அவை அல்லாஹ் விரும்பாதவைகளை விட்டும் உங்களை தடுக்கும். அதனால் இஸ்லாமிய ஷரீஆ வலியுறுத்தியதற்கு அப்பால் எதனையும் அதிகப்படுத்துவிடாதீர்கள் என்றும், அல்லாஹ் சில விடயங்களை தடைசெய்துள்ளான் அதனை செய்யவோ அதன் அருகே நெருங்கவோ வேண்டாம். இவை தவிர உள்ளவை யாவும் அல்லாஹ் தனது அடியார்களின் மீது கொண்ட கருணையின் காரணமாக அது குறித்து ஏதும் பேசாது விட்டுவிட்டான். எனவே அவை அடிப்படையில் அனுமதிக்கப்பட்டதாகும் ஆகையால் அவற்றை தேட வேண்டாம் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்.