சூரியன் உதயமாகும் நாட்களில் மிகச் சிறந்த நாள் ஜும்ஆ தினமாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இத்தினத்தின் சிறப்புகள் சில பின்வருமாறு : இந்நாளில் ஆதம் அலைஹிஸ்லாம் படைக்கப்பட்டமை. சுவர்க்கத்தினுள் நுழைவிக்கப்பட்டமை, அதிலிருந்து வெளியேற்றபட்டு பூமிக்கு இறக்கப்பட்டமை, இந்நாளில் யுகமுடிவு நிகழ்கின்றமை போன்றனவாகும்.