தொழுகை நடைபெறாத அடக்கஸ்தளங்களைப் போன்று வீடுகளை ஆக்கி விட வேண்டாமென நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் இந்த ஹதீஸில் தடுத்துள்ளார்கள்.
அதனைத் தொடர்ந்து ஸுறா பகரா ஓதும் வீட்டிலிருந்து ஷைதான் விரண்டோடுகிறான் எனவும் தெரிவிக்கிறார்கள்.
ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்
வீடுகளில் அதிகமாக வணக்கவழிபாடுகளிலும் ஸுன்னத்தான தொழுகைகளிலும் ஈடுபடுவது வரவேற்கத்தக்க விடயங்களாகும்.
ஜனாஸாத் தொழுகை தவிர்ந்த ஏனைய தொழுகைகளை அடக்கஸ்தளங்களில் தொழுவது கூடாது. ஏனெனில் அவ்வாறு தொழுவது இணைவைப்பிற்கும் குறிப்பிட்ட மனிதர்களை எல்லை மீறி மகிமைப்படுத்தவும் காரணமாக அமைந்துவிடுகிறது.
மண்ணறைகளில் தொழுவது தடைசெய்பட்டது என்பது ஸஹாபாக்களில் அறியப்பட்ட, உறுதியான விடயமாகும். ஆகவேதான் நபியவர்களும் அதேபோன்று தொழுகை நடாத்தப்படாத மண்ணறைகளாக வீடுகளை ஆக்கிவிட வேண்டாம் எனத் தடுத்துள்ளார்கள்.