ஸூரா பகராவின் இறுதி இரு வசனங்களையும் இரவில் தூங்க முன் ஓதியவரை எந்தவொரு கெடுதி, தீங்கும் தொடாமல் அல்லாஹ் பாதுகாக்கின்றான் என நபியவர்கள் கூறுகின்றார்கள். இதில் வேறு கருத்துக்களும் கூறப்பட்டுள்ளன. அவை வருமாறு : இரவுத் தொழகைக்குப் பதிலாக இவ்விரு வசனங்களும் போதுமாகும். தூங்கும் போது ஓத வேண்டிய ஏனைய திக்ருகளுக்குப் பதிலாக இது போதுமாகும். இரவுத் தொழுகையில் ஓத வேண்டிய அதி குறைந்த பட்ச அளவு இவ்விரு வசனங்களுடைய அளவாகும். இந்நபிமொழியில் இடம்பெற்றுள்ள வார்த்தை மேற்கண்ட அனைத்து கருத்துக்களையும் உள்ளடக்குகின்றது.