நபிகள் (ஸல்) அவர்கள் தனக்குக் கூறியதாக, உக்பா இப்னு ஆமிர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : எனக்கு அல்லாஹ் சில வசனங்களை இறக்கியுள்ளான். அவற்றைப் போன்று (பாதுகாப்புத் தேடுவதில்) வேறு வசனங்களைக் காணமுடியாது. (அவையே) முஅவ்விததைன் (எனப்படும் ஸூரா அல்பலக் மற்றும் ஸூரா அந்நாஸ் ஆகிய ஸூராக்கள்) ஆகும்.