நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ கதாதா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : நல்ல கனவுகள் அல்லாஹ்விடமிருந்து வருபவையாகும். கெட்ட கனவுகள் ஷைத்தானிடமிருந்து வருபவையாகும். உங்களில் யாராவது பயங்கரமான ஓர் கெட்ட கனவைக் கண்டால், தனது இடப்பக்கம் உமிழ்ந்துவிட்டு, அதன் தீங்குகளை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கேட்கட்டும். அப்போது அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தமட்டாது. சரியானது - இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
explain-icon

விளக்கம்

தூக்கத்தில் வரும் மகிழ்ச்சியூட்டும் நல்ல கனவுகள் அல்லாஹ்விடமிருந்து வருவதாகவும், வெறுப்பையும், கவலையையும் ஏற்படுத்தும் கெட்டகனவுகள் ஷைத்தானிடமிருந்து வருவதாகவும் நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். யாராவது பயங்கரமான வெறுப்பான ஒரு கனவைக் கண்டால், தனது இடப்பக்கம் உமிழ்ந்து விட்டு, அதன் தீங்குகளை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கேட்கட்டும். அப்போது அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தமட்டாது. ஏனெனில் மேலே கூறப்பட்ட அம்சங்களை, அக்கனவின் விளைவாக ஏற்பட வாய்ப்புள்ள பாதிப்பக்களை விட்டும் காப்பவையாக ஆக்கியுள்ளான்.

explain-icon

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  • 'ருஃயா', 'ஹுல்ம்' ஆகிய இரண்டுமே ஒருவர் தூக்கத்தில் காணும் கனவுகளையே குறிக்கின்றது. ஆனாலும், 'ருஃயா' என்பது ஒரு மனிதன் காணும் நல்ல, அழகான அம்சங்களையும், 'ஹுல்ம்' என்பது ஒரு மனிதன் காணும் கெட்ட, அறுவறுப்பான கனவுகளையும் குறிக்கப் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது. இரண்டுமே நேர்மாற்றமான அர்த்தங்களிலும் பயன் படுத்தப்படலாம்.
  • கனவின் வகைகள்: 1. நல்ல கனவுகள். இவை உண்மையான கனவுகள் மற்றும் அல்லாஹ்விடமிருந்து வரும் நற்செய்திகளாகும். அவை அவர் காணும் கனவாகவோ, அல்லது அவரைப் பற்றி இன்னொருவர் காணும் கனவாகவோ இருக்கலாம். 2. மனக் கற்பனைகள்; அதாவது, மனிதன் விழிப்பில் தனக்குள் கூறிக்கொள்ளும் கற்பனைகள். மனிதனைக் கவலைப்படுத்தும் நோக்கில் ஷைத்தான் உருவாக்கும் பயங்கரமான, பயமுறுத்தவும் கவலையுறவும் செய்யும் கனவுகள்.
  • நல்ல கனவுகள் விடயத்தில் கூறப்பட்டுள்ளவை சுருக்கமாக மூன்றாகும்: அதற்காக அல்லாஹ்வைப் புகழ்தல், சந்தோசப்படல், தனக்கு வெறுப்பானவர்களுக்கல்லாமல், விருப்பமானவர்களுக்கு மாத்திரம் அதைக் கூறல்.
  • கெட்ட கனவுகள் விடயத்தில் கூறப்பட்டுள்ள ஒழுக்கங்கள் சுருக்கமாக ஐந்தாகும்: அதன் தீங்கையும், ஷைத்தானின் தீங்கையும் விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடல், தூக்கத்தில் இருந்து விழிக்கும் போது இடப்பக்கமாக மூன்று தடவைகள் உமிழ்தல், யாரிடமும் அதைக் கூறாமல் இருத்தல் , தொடர்ந்து உறங்க விரும்பினால் ஏற்கனவே உறங்கிய பக்கத்திற்கு மாற்றமான பக்கத்தில் சாய்ந்து உறங்குதல். அப்போது அவை எப்பாதிப்பையும் ஏற்படுத்தமாட்டாது.
explain-icon

மேலதிக விபரங்களுக்கு