இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் மிகப்பெரிய பொய் குறித்து தெளிவுபடுத்துகிறார்கள். அதுதான் மனிதன் தூக்கத்தில் தான் ஒன்றை கண்டதாகவும், அல்லது விழிப்போடு இருக்கும் நிலையில் காணாத ஒன்றை கண்டதாகவும் வாதிடுவது மிகப் பெரும் பொய்யாகும். விழித்திருக்கும் நிலையில் தான் ஒன்றை கண்டதாக பொய் சொல்வது கனவில் தான் ஒரு விடயத்தை கண்டதாக சொல்வதை விட மிக ஆபத்தான விடயமாகும், காரணம் யாதெனில் கனவில் ஒன்றைக் காணுவது அல்லாஹ்வின் புறத்தில் இருந்து நிகழ்வதாகும். இந்நிலையில் பொய் சொல்வது அல்லாஹ்வின் மீது பொய்யுரைப்பதை ஒத்ததாகும்.