நபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எல்லாவகையான பட்டு அணிவதை விட்டும் ஆண்களை தடை செய்தார்கள். தங்கப் பாத்திரத்திலோ, வெள்ளிப் பாத்திரத்திலோ தங்கம் வெள்ளி பைகளிலோ சாப்பிடுவதை குடிப்பதை விட்டும் ஆண்களையும் பெண்களையும் தடை செய்தார்கள். மறுமை நாளில் அவை முஃமின்களுக்கே பிரத்தியேகமானது என நபியவர்கள் கூறினார்கள்; ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வின் ஆணைக்கு கட்டுப்பட்டு இவ்வுலகில் அவற்றைப் பயன்படுத்துவதை விட்டும் தவிர்ந்து கொண்டனர். ஆனால் நிராகரிப்பாளர்களாகிய கபிர்களுக்கு மறுமையில் அவை கிடையாது. ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டை மீறி அவர்களின் இவ்வுலக வாழ்விலே தடை செய்யப்பட்டவைகளை பயன்படுத்தி அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்தனர்.