மனிதர்களின் உடம்பின் கீழ் அரைப் பகுதியை மறைக்கும் (வேட்டி போன்ற) ஆடைகளுக்கு மூன்று நிலைகள் இருப்பதை நபியவர்கள் தெளிவு படுத்தியுள்ளார்கள் முதலாவது : அரைக்கணுக்கால் வரை இருப்பதுவே விரும்பத்தக்கதாகும். இரண்டாவது : வெறுக்கப்படாமல் அனுமதிக்கப்படும் நிலை. அதாவது, பாதத்தையும் கணுக்காலையும் பிரிக்கும் கரண்டைக் கால் வரை இருத்தல். மூன்றாவது : தடுக்கப்பட்ட நிலை; அதாவது, கரண்டைக்காலுக்குக் கீழாக இருத்தல். இவரை நரக நெருப்புத் தீண்டலாம். அகம்பாவம், பெருமை மற்றும் கருவத்துடன் அவ்வாறு செய்திருந்தால், அல்லாஹ் அவரைப் பார்க்கமாட்டான்.