நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : (ஆண்களில்) யார் இம்மையில் பட்(டா)டை அணிகிறாரோ அவர் மறுமையில் அதை அணிய மாட்டார்' சரியானது - இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
explain-icon

விளக்கம்

இவ்வுலகில் ஆண்களில் பட்டாடை அணிபவர் மறுமையில் அதனை அணியமாட்டார் என இந்த ஹதீஸில் நபியவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். ஒருவர் பட்டாடை அணிந்து அதற்காக தௌபா –பாவமீட்சி கோராது விட்டால் அவறுக்கான மறுமையின் தண்டனை இதுவாகும்.

explain-icon

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  • இங்கு பட்டாடை என்பது இயற்கையான தூய்மையான பட்டையே குறிக்கிறது செயற்கை பட்டை குறிக்காது.
  • ஆண்கள் பட்டாடை அணிவது ஹராமாகும்
  • பட்டாடை அணிதல் தடுக்கப்பட்டிருத்தல் என்பது அதனை ஆடையாக, விரிப்பாக பயன்படுத்துவதனையும் உள்ளடக்கும்.
  • ஆண்கள் தங்கள் ஆடைகளில் இரண்டு அல்லது நான்கு விரல்கள் அளவுக்கு அகலமான பட்டுத் துணியை மாத்திரம் பயன்படுத்த அனுமதிக்கப் படுகிறார்கள், அதை ஆடையின் குறியீடாகவோ அல்லது ஆடையின் ஒரத்திற்கு அலங்காரமாகவோ பயன்படுத்தலாம்.
explain-icon

பிரிவுகள்

explain-icon

மேலதிக விபரங்களுக்கு