நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் கேட்டதாக ஜுபைர் இப்னு முத்இம் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : உறவை துண்டித்து நடப்பவன் சுவனம் நுழைய மாட்டான்'. சரியானது - இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
explain-icon

விளக்கம்

தனது உறவுகளுடன் உறவை முறித்து அவர்களுக்கு வழங்க வேண்டிய உரிமைகளை வழங்காது, அல்லது அவர்களுக்கு நோவினை செய்து, கெடுதி செய்பவர் சுவர்கத்தினுள் நுழையும் தகுதியை இழந்துவிட்டவராவார் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் தெரிவிக்கிறார்கள்.

explain-icon

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  • உறவைத் துண்டிப்பது பெரும்பாவங்களில் ஒன்றாகும்.
  • உறவுகளை சேர்ந்து நடப்பது என்பது வழக்காறுகளைப் பொறுத்தே அமையும். இது கால இட மனிதர்களின் வித்தியாசத்திற்கேட்ப வேறுபடும்.
  • உறவுகளை சேர்ந்து நடப்பதென்பது அவர்களை தரிசித்தல், தர்மம் வழங்குதல், அவர்களுக்கு உபகாரம் செய்தல் போன்றவைகளுடன், நோயாளியை சுகம் விசாரிக்கச் செல்லுதல், அவர்களுக்கு நன்மையான விடயங்களை ஏவுதல், தீமையான விடயங்களை தடுத்தல் போன்ற விடயங்களை குறிக்கிறது.
  • உறவுகளை துண்டிப்பது, உறவுகளில் மிகவும் நெருங்கிய உறவுகளுடன் (உம் : தாய் தந்தை சகோதரர் சகோதரி) இருப்பின் அதற்குரிய பாவமும் கடுமையானதாக அமைந்து விடும்.