நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் தோழர்களில் சிலருக்கு லைலத்துல் கத்ர் ரமழானின் கடைசி ஏழு இரவுகளில் இருப்பதாக ஒரு கனவில் காட்டப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ' லைலத்துல் கத்ர் இரவு கடைசி ஏழு இரவுகளில் ஒன்றில் நிகழும் என்பதை உங்கள் கனவுகள் ஒருமித்துக் காட்டி நிற்கிறது. எனவே, லைலத்துல் கத்ரைக் அடைய விரும்புபவர், கடைசி ஏழு இரவுகளில் அதை விடாமுயற்சியுடன் தேடட்டும்.' என நபி (ஸல்) அவர்கள் ஊக்கப்படுத்துகிறார்கள். லைலத்துல் கத்ர் இரவு ரமழானின் கடைசி பத்து இரவுகளில், குறிப்பாக கடைசி ஏழு இரவுகளில் இருக்க வாய்ப்புள்ளது. ரமழான் மாதம் 30 நாட்கள் என்றால், கடைசி ஏழு இரவுகள் 24 வது இரவில் இருந்து தொடங்குகின்றன. ரமழான் மாதம் 29 நாட்கள் என்றால், அவை 23 வது இரவில் இருந்து தொடங்குகின்றன. நபி (ஸல்) அவர்கள் நம்மை அதிக நல்ல செயல்களைச் செய்யவும், அல்லாஹ்வை நினைவில் கொள்ளவும், இந்த இரவுகளில் அதிகமாக பிரார்த்தனை செய்யவும் ஊக்குவித்தார்கள்.