ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகின்றார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கழிப்பறையிலிருந்து வெளியே வந்ததும், 'குஃப்ரானுக்' «غُفْرَانَكَ (யா அல்லாஹ், நான் உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன்) என்று கூறுவார்கள்.
சரியானது - இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோர் இதனை பதிவு செய்துள்ளனர்
தேவையை முடித்து விட்டு கழிப்பறையிலிருந்து வெளியே வரும்போது, 'அல்லாஹ்வே! நான் உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன்' என்று பொருள்படும் غُفْرَانَكَ என்ற வார்த்தையைக் கூறுபவர்களாக நபியவர்கள் இருந்தார்கள்.
ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்
மலசலம் கழிக்கும் இடத்தை விட்டு வெளியேறும்போது 'குஃப்ரானக' என்று கூறுவது நபிவழியாகும்;.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது எல்லா சூழ்நிலைகளிலும் அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடினார்கள்.
இயற்கைத் தேவையை முடித்த பிறகு மன்னிப்பு கேட்பதற்கான காரணம் குறித்து பின்வருமாறு கூறப்படுகிறது : சிலர், இது அல்லாஹ்வின் பல அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவதில் அலட்சியமாக இருப்பதால் என்கின்றனர். மேலும் சிலர் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் மலம் உடலிருந்து இலகுவாக வெளியேறியமை காரணமாக இருக்கலாம் என்றும் கூறுகின்றனர். அல்லது இயற்கைத்தேவையை நிறைவேற்றும் போது அல்லாஹ்வின் நினைவிலிருந்து ஒருவர் திசை திருப்பப்பட்டதற்காக மன்னிப்புக் கோரியிருக்கலாம் எனவும் இதற்கான காரணம் சம்பந்தாக குறிப்பிடுகின்றனர்.