நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) கூறினார்கள் : "நீங்கள் சிறுநீரிலிருந்து சுத்தமாகிக் கொள்ளுங்கள். ஏனெனில் கப்ரில் பெரும்பான்மையான வேதனை அதன் காரணமாகத் தான்". ஸஹீஹானது-சரியானது - இதனை அத்தாரகுத்தனீ பதிவு செய்துள்ளார்
explain-icon

விளக்கம்

கப்ரில் இருக்கும் வேதனைக்கான காரணங்களில் ஒன்றை நபியவர்கள் எமக்கு விளக்குகின்றார்கள். அதுதான் பரவலாக உள்ள ஒரு விடயமாகும். அது சிறுநீர் கழித்ததும் முறையாக சுத்தம் செய்யாமையாகும்.

explain-icon

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  • சிறுநீர் கழிக்கும் போது தனது உடல், உடையில் பட்டுவிடாமல் கவனித்துக் கொள்ள வேண்டும்.
  • அவ்வாறு பட்டாலும் அசுத்தமாகாமல் இருப்பதற்காக, பட்ட இடத்தை உடனடியாக கழுவிக் கொள்வது மிகச் சிறந்தது, தொழுகைக்குச் செல்லும் போதே சுத்தம் செய்வது கடமையாகின்றது.
  • சிறுநீர் அசுத்தமானதாகும். உடலிலோ, உடையிலோ, இடத்திலோ பட்டால் அவ்விடம் அசுத்தமாகிவிடும், அதனுடன் தொழுகை செல்லுபடியாக மாட்டாது. ஏனெனில் அசுத்தங்களை நீக்குவது தொழுகையின் நிபந்தனைகளில் உள்ளவையாகும்.
  • சிறுநீரிலிருந்து சுத்தமாகாமலிருப்பது பெரும்பாவங்களில் உள்ளதாகும்.
  • கப்ரில் வேதனை உண்டு, இது அல்குர்ஆன், ஸுன்னா, அறிஞர்களின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் உறுதியான விடயமாகும்.
  • மறுமையில் கூலி வழங்கல் உண்டு. மறுமையின் முதற்படி கப்ருகளாகும். அவை ஒன்றோ சுவனப் பூஞ்சோலையாக அல்லது நரகின் படுகுழியாக இருக்கும்.
explain-icon

மேலதிக விபரங்களுக்கு