இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறுகிறார்கள்: பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்ற வசனம் இறங்கும் வரையில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஸூறாக்களுக்கிடையிலான வித்தியாசத்தை அறியாதவராக இருந்தார். சரியானது - இதனை இமாம் அபூதாவுத் பதிவு செய்துள்ளார்
explain-icon

விளக்கம்

அல்குர்ஆனின் ஸூறாக்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு இறங்கிக் கொண்டிருந்தன. நபியவர்கள் ஒவ்வொரு ஸுறாவும் எந்த இடத்தில பிரிகிறது என்பதையோ எந்த இடத்தில் முடிவடைகிறது என்பதையோ பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்ற வசனம் இறங்கும் வரையில் அறியாதவராக இருந்தார்கள் என இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா தெளிவு படுத்துகிறார்கள்.பிஸ்மில் இறங்கியதும் குறிப்பிட்ட ஸுறா முடிவடைந்து புதிய ஒரு ஸுறாவின் ஆரம்பம் குறித்து அறிந்து கொண்டார்கள்.

explain-icon

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  • ஸுறதுல் அன்பால், ஸூறதுத்தௌவ்பாக்கிடையில் தவிர ஒவ்வொரு ஸுறாவையம் பிரிக்கும் வசனமாக பிஸ்மில் உள்ளது.
explain-icon

மேலதிக விபரங்களுக்கு