குடிமக்களின் விவகாரங்களை தலைவர்களும், அதிகாரிகளும் நிர்வகிப்பது போன்று பனூ இஸ்ராஈல்களின் விவகாரங்களை நபிமார்கள் நிர்வகித்து வந்தனர். அவர்களிடம் சீர்கேடுகள் தோன்றும் போதோல்லாம் அவர்களின் விவகாரங்களை சீர்செய்வதற்கும் அவர்கள் மாற்றிய சட்டதிட்டங்களை நீக்குவதற்காகவும்; நபிமார்களை அனுப்பினான் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தெரிவிக்கிறார்கள். ஆனால் என் உம்மத்திற்காக இதைச் செய்ய எனக்குப் பிறகு எந்த தீர்க்கதரிசியும் வரமாட்டார். எனக்குப் பிறகு, ஏராளமான கலீஃபாக்கள் இருப்பார்கள், அவர்களிடையே வேறுபாடுகளும் மோதல்களும் எழும். எனினும் எனக்குப்பின்னால் அதிகமான கலீபாக்கள் தோன்றி அவர்கள் மனிதர்களை ஆட்சி புரிவார்கள்.என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறிய போது 'உங்களுக்குப்பின்னர் கலீபாக்கள் அதிகரித்து விட்டால் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு விடுமே. அப்படியாயின் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று தாங்கள் நம்மைப் பணிக்கின்றீர்கள்' என ஸஹாபாக்கள் ரஸூல் (ஸல்) அவர்களிடம் வினவினர். ஒரு கலீஃபா இருக்கும் நிலையில் இன்னொருவருவருக்கு பைஅத் (சத்தியப் பிரமாணம்) பைஅத் செய்தால் முதல் கலீஃபாவிற்கான விசுவாசம் செல்லுபடியாகும், அதைக் கடைப்பிடிக்க வேண்டும், அதே நேரத்தில் இரண்டாவது கலீஃபாவிற்கான பைஅத் விசுவாசப் பிரமாணம் பாதிலாகும். (செல்லுபடியாக மாட்டாது) அவ்வாறு செயவது தடைசெய்யப்பட்டுள்ளது. கலீஃபாக்களுக்கான உரிமையை வழங்கி நிறைவேற்றுங்கள், அவர்களைப் பின்பற்றுங்கள். குர்ஆன் மற்றும் ஹதீஸுக்கு முரணாக இல்லாத விடயங்களில் அவர்களுக்கு கட்டுப்பட்டு நடங்கள். ஏனென்றால் உங்களுக்கு அவர்கள் என்ன செய்தார்கள் என்பது குறித்து அல்லாஹ் அவர்களை மறுமையில் விசாரிப்பான்.