நபி (ஸல்) அவர்கள் ஒன்றை விட்டும் எம்மைத் தடுத்தால் விதிவிலக்கின்றி முற்றாகத் தவிர்ந்து கொள்ள வேண்டும், ஒன்றை ஏவினால் முடியுமானளவு செய்ய வேண்டும் என்பதை இந்நபிமொழி எமக்கு அறிவிக்கின்றது. பின்னர் முன்னைய சில சமுதாயங்களைப் போன்று நாமும் ஆகிவிடுவதை எமக்கு எச்சரித்தார்கள். அவர்கள் அளவுக்கதிகமான கேள்விகளைக் கேட்டு, தமது நபிமார்களுடன் முரண்பட்டதால் பேரழிவின் மூலம் அல்லாஹ் அவர்களைத் தண்டித்தான். எனவே அவர்களைப் போன்று நாமும் ஆகிவிடக் கூடாது, நாமும் அவர்களைப் போன்றே அழிய நேரிடும்.