முஸ்லிம் சமூகத்தின் விவகாரங்களை பொறுப்பேற்றோர் அது சிறிய பொறுப்போ, பெரிய பொறுப்போ அது குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பிராரத்தனை புரிந்துள்ளார்கள். அதாவது அதிகாரத்தைப் பெற்று நலினமாக நடந்து கொள்ளாது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்திய அவர்களுக்கும் அதே மாதிரியான செயலுக்கேற்ற கூலியை வழங்குமாறு நபியவர்கள் அவர்களுக்கு எதிராகப் பிரார்த்தனை செய்துள்ளார்கள். யார் அவர்களுடன் நலினமாக நடந்து அவர்களின் விவகாரங்களை இலகுபடுத்திக் கொடுக்கின்றாரோ அவர்களுடன் அல்லாஹ் நலினமாக நடப்பதுடன் அவனுடைய விவகாரங்களையும் இலகுபடுத்திக் கொடுக்கிறான்.