ஹதீஸ் குத்ஸியில் அல்லாஹ் கூறுவதாக, நபியவர்கள் கூறுகின்றார்கள் : சோதனைகளும், வெறுக்கத்தக்க அம்சங்களும் நிகழும் போது, காலத்தை இகழ்ந்து, ஏசும் மனிதன், என்னைக் குறை கூறி நோவினை செய்கின்றான். ஏனெனில், நிகழும் அனைத்தையும் அல்லாஹ்வே நிர்வகித்து, செயற் படுத்துகின்றான். எனவே, காலத்திற்கு ஏசுவது என்பது, அல்லாஹ்வுக்கு ஏசுவதே! காலம் என்பது, (அல்லாஹ்வினால்) வசப்படுத்தப்பட்டுள்ள ஒரு படைப்பே. அல்லாஹ்வின் கட்டளை கொண்டே அதில் சம்பவங்கள் நிகழுகின்றன.