நபி ﷺ அவர்கள், வியாபார நடவடிக்கைகளில் விற்றல் வாங்கலின் போது ஒருவர் உண்மையையே சொன்னாலும்—சத்தியம் செய்வதையும், அதனை அதிகமாக செய்வதையும் எச்சரித்தார்கள். சத்தியம் செய்வதால் பொருள் விற்பனை அதிகரித்து சந்தையில் குறித்த பொருளுக்கு கிராக்கி ஏற்படலாம். ஆனால் அது இலாபம் மற்றும் வருமானத்தில் உள்ள பரகத்தை (அருள்வளத்ததை) குறைத்து, அழித்துவிடும். மேலும் அல்லாஹ், அவனது செல்வம் அழிவதற்கான பல வழிகளை ஏற்படுத்தக் கூடும்—திருட்டு, தீவிபத்து, மூழ்குதல், பறிமுதல், கொள்ளை அல்லது பிற காரணங்களால் அவனது சொத்து நஷ்டமடையலாம்.