பாவம் செய்வதற்கும் அநியாயம் இழைக்கவும் இலகுபடுத்தி தருமாறு பிரார்த்தித்தல் அல்லது தனது குழந்தைகள் மற்றும் உறவுகளை துண்டித்து வாழ்வதற்கு அவர்களுக்கு எதிராக பிராரத்தனை செய்தல் போன்ற பாவமான ஒன்றை ஒரு முஸ்லிம் கேட்காது அல்லாஹ்விடம் பிராரத்தனை செய்தால் அவருக்கு அல்லாஹ் பின்வரும் மூன்று விடயங்களில் ஒன்றை நிச்சயம் வழங்குவான்: ஒன்று : அவன் பிரார்த்தனையை உடனே ஏற்று, அவன் கேட்டதை அவனுக்கு வழங்குவான். அல்லது அவனது அந்தஸ்த்தை உயர்த்துவதன் மூலம், அல்லது அவனுக்கு கருணை காட்டி, அவன் பாவங்களை மன்னிப்பதன் மூலம் மறுமை நாள் வரை அவனது கூலியை தாமதப்படுவான். அல்லது இவ்வுலகில் பிரார்த்தனையின் அளவுக்குச் சமமாக அவனிடமிருந்து தீமையைத் தடுப்பான். அப்போது ஸஹாபாக்கள் நபி (ஸல்) அவர்களிடம், எனவே இந்த சிறப்புகளில் ஒன்றை நாம் அடையும் பொருட்டு, நாம் அதிகமாக பிரார்த்தனை செய்வோம் எனக் கூறினார்கள். அதற்கு நபியவர்கள் நீங்கள் கேட்பதை விட அல்லாஹ்விடம் இருப்பது அதிகமானது, மற்றும் மகத்தானது, அவனுடைய அருளும் முடிவற்றது என்று கூறினார்கள்: