ஜரீர் இப்னு அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களிடம்: ஒரு ஆணின் பார்வை திடீரென்று ஒரு அந்நியப் பெண்ணின் மீது எவ்வித நோக்கமுமின்றிப் பட்டால் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள்: அவர் அந்நியப்பெண்ணைப் பார்ப்பதை உணர்ந்தால் உடனடியாக முகத்தைத் திருப்பி வேறு பக்கம் பார்க்குமாறு வலியுறுத்தினார்கள். அவர் அவ்வாறு செய்தால், அவர் மீது எந்தப் பாவமும் இல்லை.