நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் செலவு செய்வதன் சில வடிவங்கள் குறித்து தெளிவுபடுத்தி, அவை, (அதாவது செலவு செய்ய வேண்டிய பகுதிகள்) அதிகமாகும் போது அதில் உங்களுக்கு மிகவும் கட்டாயமானது என்பதின் அடிப்படையில், மிகவும் பொருத்தமான செலவீன முறையை வரிசைப்படுத்திக் குறிப்பிட்டுள்ளார்;. அந்தவகையில் ஒரு முஸ்லிம் தான் அவசியம் செலவு செய்யவேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட,(தம்மைச் சார்ந்தவர்களான) மனைவி பிள்ளை போன்றோருக்கு செலவு செய்யும் செல்வமே அதிக கூலியைப் பெற்றுத்தரும் செல்வமாகும் என நபியவர்கள் குறிப்பிட்டார்கள். அதன் பின் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வதற்காக தயார்படுத்தப்பட்ட வாகனத்திற்காக செலவு செய்வது. அல்லாஹ்வின் பாதையில் போராடும் தனது தோழர்கள் மற்றும் நண்பர்களுக்காக செலவு செய்வது.