அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு வாசனை வழங்கப்பட்டால் அதனை மறுக்காது ஏற்றுக்கொள்வார்கள். சரியானது - இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்
explain-icon

விளக்கம்

வாசைன திரவியங்கள் வழங்கப்பட்டால் அதனை மறுக்காது ஏற்றுக்கொள்வது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வழிமுறைகளில் ஒன்றாக இருந்தது. ஏனெனில் அது சுமந்து செல்வதற்கு எளிதாக உள்ளது, மற்றும் நறுமண மிக்கதாகவும் காணப்படுகிறது.

explain-icon

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  • நறுமணப் பொருட்கள் வழங்கப்படும் போது அதனை ஏற்பது விரும்பத்தக்கதாகும். ஏனெனில் அதனைச் சுமந்து செல்லச் செலவு கிடையாது, அதனை ஏற்பதால் கொடுத்தவர் சொல்லிக் காட்டும் அளவு முக்கியத்துவமும் கிடையாது.
  • யார் நறுமணத்தை பரிசாக அளிக்கிறாரோ அதனை மறுக்காது ஏற்றுக்கொள்வதில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பூரண நற்குணம் தெளிவாகிறது.
  • நறுமணத்தைப் பயன்படுத்த ஆர்வமூட்டுதல்.