இறை நம்பிக்கையாளர்களின் தாயார் ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறியதாவது: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமழானின் கடைசி பத்து நாட்களில் லைலத்துல் கத்ரை எதிர்பார்த்து பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருந்தார்கள். நபியவர்கள்; இறக்கும் வரை இதனை தொடர்ந்தும் செய்து வந்தார்கள். நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு, அவரது மனைவியர்களும் இஃதிகாஃபை கடைப்பிடித்து வந்தனர்.