நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஜ்ஜதுல் வதாஇலிருந்து திரும்பி வந்த பொழுது ஹஜ்ஜுவணக்கத்தை நிறை வேற்றாத அன்ஸாரிப் பெண்ணிடம் எம்முடன் ஹஜ்ஜு செய்வதற்கு உம்மை எது தடுத்தது? என வினவினார்கள் அதற்கு அவள் தமக்கு இரு ஒட்டகங்கள்தானிருந்தன. அவைகளில் ஒன்றில் தன் கணவரும் மகனும் ஹஜ்ஜுக்கு சென்றுவிட்டனர். மற்றதை நாம் நீர் இரைப்பதற்காக விட்டுச் சென்றனர் என்று காரணம் கூறினாள். அப்பொழுது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'ரமழான் மாதம் உம்ரா வணக்கத்தை நிறை வேற்றுவதன் கூலி ஒரு ஹஜ்ஜுடைய கூலிக்கு சமம் என்று அப் பெண்ணிடத்தில் கூறினார்கள்.