தொழுகையில் ஆண்களின் ஸஃப்புகளில் மிகச் சிறந்ததும் அதிகம் நன்மையையும் சிறப்பையையும் பெற்றுத் தரக்கூடியதும் முதல் ஸப்பாகும். ஏனெனில் முதல் வரிசையில் இருப்போர் இமாமுக்கு நெருக்கமாக இருக்கவும், அவரது ஓதலை எளிதாகக் கேட்பதற்குமான வாய்ப்பை பெறுவதோடு பெண்களை விட்டும் தூரமாகவும் இருக்கிறார். ஆண்களுக்கு மிகக் குறைந்த நன்மையையும், சிறப்பையும் பெற்றுத்தரக்கூடியதும், ஷரீஆவின் வேண்டுகோளை விட்டும் தொலைவில் உள்ள ஒரு விடயமாக கடைசி வரிசை (ஸப்பு) உள்ளது. மாறாக, பெண்களுக்குரிய சிறந்த வரிசை (ஸஃப்பு) கடைசி வரிசையாகும். ஏனென்றால் அது அவர்களுக்கு மிகவும் பாதுகாப்பானது, மேலும் அது ஆண்களுடன் கலப்பதிலிருந்தும், அவர்களைப் பார்ப்பதிலிருந்தும், அவர்களால் சோதிக்கப்படுவதிலிருந்தும் வெகு தொலைவில் உள்ளது. ஆண்களுடன் அவர்கள் நெருக்கமாக இருப்பதால், சோதனைக்கு ஆளாகிறார்கள் என்பதால், அவர்களின் வரிசைகளில் மிக மோசமானது முதல் வரிசையாகும்.