நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அதிகம் மிஸ்வாக் செய்பவர்களாகவும் அதனை வலியுறுத்துபவர்களாகவும் இருந்தார்கள். பல்துலக்குவது –மிஸ்வாக் செய்வது- சில வேளைகளில் வலியுறுத்தப்பட்ட விடயமாகும் அவற்றில் : இரவில் தூங்கி எழும்பினால் பல்துலக்குவது. அந்த நேரத்தில் நபியவர்கள் அராக் குச்சியால் -மிஸ்வாக்- பல்லை துலக்கி சுத்தம் செய்பவர்களாக இருந்தார்கள்.