நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் யுத்தம் புரிபவர்களின் மாறுபட்ட நோக்கங்கள் பற்றி வினவப்பட்டது. அதாவது தான் ஒரு வீரன் என்பதற்காக யுத்தம் புரிபவர். இன்னொருவர் இனமாச்சிரியத்திற்காக யுத்தம் புரிபவர். மற்றவர் முகஸ்துதிக்காகவும் புகழுக்காகவும் யுத்தம் புரிபவர். இவர்களில் யார் அல்லாஹ்வின் பாதையில் உள்ளார்? அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: யார் அல்லாஹ்வின் வார்த்தை மேலோங்கி உயர் நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக போர் புரிகின்றாறோ அவர் அல்லாஹ்வின் பாதையில் உள்ளார் என்றார்கள்.