நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ மூஸா அல்அஷ்அரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : 'வலீ (பொறுப்பாளர்) இல்லாமல் திருமணம் இல்லை'.
சரியானது - இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோர் இதனை பதிவு செய்துள்ளனர்
திருமண ஒப்பந்தத்தை நடாத்துவதற்கான பொறுப்பாளர் இன்றி ஒரு பெண் திருமணம் செய்வது செல்லுபடியாகாது, என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.
ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்
திருமணம் செல்லுபடியாவதற்கு வலீ (பெண்ணின் பொறுப்பாளர்) இருப்பது நிபந்தனையாகும். அவ்வாறு வலீயில்லாமல் திருமணம் நிகழந்தால், அல்லது பெண் தாமாகவே திருமணம் செய்து கொண்டால் அந்தத் திருமணம் செல்லுபடியாகாது.
வலீ என்பவர் மணப்பெண்ணுக்கு மிக நெருக்கமான உறவைக்கொண்ட ஆண்களாக இருத்தல் வேண்டும். அவ்வாறு மிகநெருங்கிய உறவுக்காரர் இருக்கும் போது தூர உறவினர் பொறுப்பாக நிற்க முடியாது.
புத்தி சுயாதீனமுள்ள, பருவமடைந்த, ஆணாகவும், திருமண நலன்கள் பற்றிய அறிவுள்ளவராகவும் வலீ இருப்பதுடன், மணமகளுடைய அதே மார்க்கத்தைப் பின்பற்றுவராகவும் அவர் இருப்பது இப்பொறுப்பிற்குரிய நிபந்தனைகளாகும். இந்தப் பண்புகளை அவர் கொண்டிருக்காவிட்டால் வலீயாக இருக்கத் தகுதியற்றவராவார்.