இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள் : 'அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தலை முடியில் சிலதை வைத்து, சிலதை சிரைப்பதை தடுத்தார்கள்'.
சரியானது - இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தலை முடியில் ஒரு பகுதியை மழித்து இன்னொரு பகுதியை விட்டுவிடுவதை தடுத்தார்கள்.
இந்தத் தடையானது ஆண்களில் சிறார்கள் மற்றும் பெரியவர்கள் அனைவருக்கும் பொதுவானது. பெண்களைப் பொருத்தவரை அவர்களின் முடியை மழிப்பது கூடாது.
ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்
மனிதனின் புறத்தோற்றத்தில் இஸ்லாமிய மார்க்கம் கரிசனை செலுத்தியுள்ளமை.