நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரழியல்லாஹு அன்ஹுமா கூறுகின்றார்கள் : 'பதிலுக்கு பதில் உறவாடுகிறவர் (உண்மையில்) உறவைப் பேணுகிறவர் அல்லர்; மாறாக உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைகிறவரே உறவைப் பேணுபவராவார்' சரியானது - இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்
explain-icon

விளக்கம்

இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள் உறவுகளை சேர்ந்து நடப்பதிலும், உபகாரம் செய்வதிலும் பூரணமான மனிதன் யாரெனில் பதிலுக்குப் பதில் உபகாரத்தை எதிர்பாரக்கும் மனிதன் அல்ல. மாறாக உறவைப் பேணுவதில் உறவுகள் துண்டித்து நடந்தாலும் அவர்களுடன் சேர்ந்து நடப்பவனும், அல்லது அவர்கள் தன்னுடன் மோசமாக நடந்து கொண்டாலும் அதற்குப் பதிலாக அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்பவனே பூரண மனிதனாவான் என்று குறிப்பிடுகிறார்கள்

explain-icon

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  • இஸ்லாமிய ஷரீஆவின் நிலைப்பாட்டில் உறவை பேணுதல் என்பது உம்மை உனது உறவுகள் துண்டித்து நடந்தாலும் அவர்களை சேர்ந்து நடப்பதும், உமக்கு அநியாயம் இழைத்தாலும் அதனை மன்னித்து விடுவதும், உமக்கு எதையும் கொடுக்காது விட்டாலும் நீ அவர்களுக்கு கொடுத்துதவுவதையுமே குறிக்கிறது. மாறாக அவர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறாரோ அதே போன்று பதிலுக்கு பதில் நடந்து கொள்வதை குறிக்கமாட்டாது.
  • உறவுகளை சேர்ந்து நடப்பது என்பது அவர்களுக்கு தம்மால் இயலுமான நன்மையான விடயங்களை செய்வதாகும். அவைகளில். உறவுகளுக்கு பண உதவிகள் வழங்குதல், அவர்களுக்காக பிரார்த்தனை செய்தல் நன்மை ஏவி தீமையைத் தடுத்தல் இது போன்ற விடயங்களுடன் அவர்களுக்கு ஏற்படுகின்ற இன்னல்களிலிருந்து பாதுகாப்பதையும் குறிக்கும்.