இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தொழுகையின் நிபந்தனைகளின் ஒன்றான சுத்தம் பற்றி தெளிவு படுத்துகிறார்கள். எனவே தொழுகையை நிறைவேற்ற நாடும் ஒருவருக்கு வுழுவை முறிக்கும் காரியங்களான மலம் அல்லது சலம் அல்லது தூக்கம் போன்ற விடயங்கள் ஏதும் ஏற்பட்டால் அவர் வுழு செய்து கொள்வது கடமையாகும்.