பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பேரரும்) அவர்களால் மிகவும் நேசிக்கப்பட்டவருமான அலி இப்னு அபூதாலிப் அவர்களின் மகன் அபூ முஹம்மது அல் ஹஸன் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பின்வருமாறு சொல்லக் கேட்டு நினைவில் இருத்திக் கொண்டேன் : 'உமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகின்ற ஒன்றை விட்டு விட்டு அதற்குப் பதிலாக சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றை எடுத்துக் கொள்;' சரியானது - இமாம்களான திர்மிதி மற்றும் அந்நஸாஈ ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது
explain-icon

விளக்கம்

சொல் மற்றும் செயல்களில், குறித்த விடயம் தடுக்கப்பட்டதா ? இல்லையா? அல்லது அது ஹலாலா ஹராமா என்ற சந்கேகத்திற்கிடமானவற்றை விட்டு விட்டு எந்த சந்தேகமுமில்லாத நல்ல மற்றும் ஹலாலான –தெளிவாக அனுமதிக்கப்பட்ட- விடயங்களை செய்யுமாறு இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

explain-icon

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  • ஒரு முஸ்லிம் தனது எல்லா விடயங்களையும், உறுதியின் மீது கட்டியெழப்பி, சந்தேகங்களை விட்டுவிடுவதும், தனது மார்க்கத்தில் தெளிவான அறிவோடிருப்பதும் கட்டாயமாகும்.
  • சந்தேகத்திற்கிடமானவற்றில் வீழ்ந்துவிடுவது தடுக்கப்பட்டுள்ளது.
  • நிம்மதியையும், மனஅமைதியையும் நீ அடைய விரும்பினால், சந்தேகத்திற்கிடமானவற்றைப் புறமொதுக்கிவிடு.
  • அல்லாஹ் தனது அடியார்களுக்குச் செய்துள்ள அருள். ஏனெனில், அவர்களுக்கு மனஅமைதியையும், நிம்மதியையும் தருபவற்றை அவன் ஏவி, தடுமாற்றத்தையும், கலக்கத்தையும் தருபவற்றைத் தடுத்துள்ளான்.
explain-icon

பிரிவுகள்

explain-icon

மேலதிக விபரங்களுக்கு