ஆஇஷா பின்த் அபூபக்கர் (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள், முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் உயர்ந்த நற்குணங்களில்; சிலதை குறிப்பிடுகிறார்கள். அவ்வாறு அவர்கள் குறிப்பிட்ட நற்குணங்களில் ஒன்று : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இரண்டு காரியங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு வழங்கப்பட்டால், அதில் பாவமல்லாதவற்றில் எளியதையே தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் அந்த எளிய காரியம் பாவத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தால், அதிலிருந்து மிகத் தூரமாக இருப்பார்கள்; அப்போது கடினமானதையே தேர்ந்தெடுப்பார்கள். இரண்டாவது நற்குணம் : நபியவர்கள் தமது தனிப்பட்ட விவகாரங்களுக்காக ஒருபோதும் பழிவாங்கவில்லை. தமக்கான சொந்த விவகராங்களில் பிறர் செய்த குறைகளை அவர் மன்னிப்பவராகவும் பொறுப்பவராகவும் இருந்தார்கள். ஆனால் அல்லாஹ்வின் வரம்புகள் மீறப்பட்டால், அப்போது அல்லாஹ்வுக்காக மாத்திரம் கடுமையாக நடந்து கொள்வார்கள். அத்துடன் அல்லாஹ்வுக்காகக் கோபப்படும் விடயத்தில் அவர் மக்களிலேயே மிகத் தீவிரமுடையவராக இருந்தார்கள். இரண்டாவது நற்குணம் : நபியவர்கள் தமது தனிப்பட்ட விவகராங்களுக்காக ஒருபோதும் பழிவாங்கவில்லை. தமக்கான சொந்த விவகராங்களில் பிறர் செய்த குறைகளை அவர் மன்னிப்பவராகவும் பொறுப்பவராகவும் இருந்தார்கள். ஆனால் அல்லாஹ்வின் வரம்புகள் மீறப்பட்டால், அப்போது அல்லாஹ்வுக்காக மாத்திரம் கடுமையாக நடந்து கொள்வார்கள். அத்துடன் அல்லாஹ்வுக்காகக் கோபப்படும் விடயத்தில் அவர் மக்களிலேயே மிகத் தீவிரமுடையவராக இருந்தார்கள்.