நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தொழுகையில் ஸஜ்தா செய்யும் போது தனது இரு கைககளுக்கிடையில் இடைவெளிவிடக் கூடியவர்களாக இருந்தார்கள். அதாவது அவரின் கைகளையும் இரு இரக்கை போன்று தனது அக்குளின் வெண்மையான தோல் தெரியுமளவிற்கு விலாப்புறத்திலிருந்து அகற்றி வைப்பார்கள். இது தனது இரு விலாப்பகுதியிலிருந்தும் கைகளை மிகவும் தூரமாக்கி வைத்திருந்ததை காட்டுகிறது.