அபூ புர்தா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள், அவரது தந்தை அபூ மூஸா அல்-அஷ்அரி (ரழி) அவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டு சுயநினைவை இழந்திருந்தார். அவரது தலை அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் மடியில் இருந்தது. அவள் சத்தமாக அழுது கொண்டிருந்தாள். ஆனால் அவர் மயக்கத்தில் இருந்ததால் அவளுக்கு ஏதும் கூற முடியவில்லை. அவர் சுயநினைவு திரும்பியபோது, அவர் கூறினார்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யாரிடமிருந்து விலகிக்கொண்டார்களோ, அவர்களிடமிருந்து தானும் விலகிக்கொள்வதாகக் குறிப்பிட்டார். அவர்களின் விபரம் வருமாறு : 1-அஸ்-ஸாலிகா: சோதனையின் போது தனது குரலை உயர்த்தும் ஒரு பெண், அதாவது, சத்தமாகவும் உரத்த குரலிலும் அழும் ஒரு பெண். 2-அல்-ஹாலிகா: சோதனையின் போது தனது தலையை மொட்டையடிக்கும் ஒரு பெண். 3-அல்-ஷாக்கா: சோதனையின் போது தனது ஆடைகளைக் கிழிக்கும் ஒரு பெண். இவ்வாறான பழக்கவழக்கங்கள் இஸ்லாத்திற்கு முந்தைய அறியாமை காலத்தில் இருந்துவந்தது. அதற்கு பதிலாக, துயரங்களின் போது பொறுமையாக இருந்து, அதற்கான கூலியை அல்லாஹ்விடம் எதிரபார்குமாறு கட்டளையிடப்பட்டிருகிறார்கள்.