மக்களுக்கு பொறுப்பாளராகவும், நிர்வாகியாகவும் அல்லாஹ் ஓவ்வொருவரையும் ஆக்கியுள்ளதாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் இந்த ஹதீஸில் தெரிவிக்கிறார்கள். குறிப்பிட்ட நிர்வாகமானது அமீர் (கலீபா) போன்ற பொது (நாட்டு) நிர்வாகமாகவோ அல்லது குடும்பத்தினூடான வீட்டு நிர்வாகம் போன்ற குறிப்பான நிர்வாகமாக இருந்தாலும் சரியே இவையனைத்தையும் இது உள்ளடக்குகிறது. ஆகவே தனது குடிமக்களின் உரிமைகளில் அலட்சியமாக நடந்து, அவர்களுக்கு மோசடி செய்து அவர்களுக்கு எந்த நலனையும் நாடாது, மார்க்கம் மற்றும் உலகியல் உரிமைகளை பால்படுத்தியவரே இவ்வாறான கடுமையான தண்டணைக்கு தகுதியானவராக மாறுகிறார்.