இங்கு நபியவர்கள் அறிவிப்பதாவது, யார், 'நான் அல்லாஹ்வை ரப்பாகவும் (அதாவது, கடவுளாகவும், பொறுப்பாளனாகவும், ஆட்சியாளனாகவும், தலைவனாகவும், சீர்த்திருத்துபவனாகவும்), இஸ்லாமை (அதாவது, ஏவல், விலக்கல்கள் உட்பட, அதன் அனைத்து சட்டங்களையும்) மார்க்கமாகவும் (அதாவது, சட்டமாக உள்ளத்தால் ஏற்றுக் கட்டுப் பட்டு), முஹம்மத் (ஸல்) அவர்களை ரஸூலாகவும் (நபியாகவும், மேலும் அவர்களுக்கு கொடுத்து அனுப்பப்பட்ட, அவர்கள் எமக்கு எத்திவைத்த அனைத்தையும்) பொருந்திக் கொண்டு விட்டேன் என்று கூறுகின்றாரோ, அவருக்கு சுவனம் கடமையாகி விட்டது.