இங்கு நபியவர்கள், நற்குணங்கள் கொண்டவர்கள், எனக்கு மிகவும் விருப்பத்திற்குரியவர்களாகவும், மறுமையில் எனக்கு மிக நெருக்கமாக இருப்பவர் களாகவும் உள்ளனர் என்றும், உங்களில் இவ்வுலகில் எனக்கு மிகவும் வெறுப்பிற்குரியவர், மறுமை நாளில் என்னிடமிருந்து மிகவும் தூரமானவர் யாரெனில், கெட்ட குணங்களைக் கொண்ட, வழவழவென்று (வீண்பேச்சு) பேசுபவர், இலக்கியம் வெளிப்பட சிரமப்பட்டு, கட்டுப்பாடின்றிப் பேசுபவர் மற்றும் பெருமையடிப்பவர் ஆவார் என்றும் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், அல்லாஹ்வின் தூதரே! வழவழவென்று (வீண்பேச்சு) பேசுபவர், இலக்கியம் வெளிப்பட சிரமப்பட்டு பேசுபவர் யார் என்பதை நாம் அறிவோம். 'முதபைஹிகூன்' என்போர் யார்? எனக் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், 'பெருமையடிப்பவர்கள்' (அதாவது, மக்களை இழிவாகக் கருதி, வாய் நிறைய அநாவசியமாக நிறையப் பேசுபவர்கள்) என்று கூறினார்கள்.