நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, ஜாபிர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : நற்குணங்கள் கொண்டவர்கள், எனக்கு மிகவும் விருப்பத்திற்குரியவர்களாகவும், மறுமையில் எனக்கு மிக நெருக்கமாக இருப்பவர்களாகவும் உள்ளனர். உங்களில் எனக்கு மிகவும் வெறுப்பிற்குரியவர், மறுமை நாளில் என்னிடமிருந்து மிகவும் தூரமானவர் யாரெனில் வழவழவென்று (வீண்பேச்சு) பேசுபவர், இலக்கியம் வெளிப்பட சிரமப்பட்டு பேசுபவர் மற்றும் பெருமையடிப்பவர் ஆவார். அப்போது நபித்தோழர்கள், அல்லாஹ்வின் தூதரே! வழவழவென்று (வீண்பேச்சு) பேசுபவர், இலக்கியம் வெளிப்பட சிரமப்பட்டு பேசுபவர் யார் என்பதை நாம் அறிவோம். 'முதபைஹிகூன்' என்போர் யார்? எனக் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், 'பெருமையடிப்பவர்கள்' என்று கூறினார்கள். சரியானது - இதனை இமாம் திர்மிதி பதிவு செய்துள்ளார்
explain-icon

விளக்கம்

இங்கு நபியவர்கள், நற்குணங்கள் கொண்டவர்கள், எனக்கு மிகவும் விருப்பத்திற்குரியவர்களாகவும், மறுமையில் எனக்கு மிக நெருக்கமாக இருப்பவர் களாகவும் உள்ளனர் என்றும், உங்களில் இவ்வுலகில் எனக்கு மிகவும் வெறுப்பிற்குரியவர், மறுமை நாளில் என்னிடமிருந்து மிகவும் தூரமானவர் யாரெனில், கெட்ட குணங்களைக் கொண்ட, வழவழவென்று (வீண்பேச்சு) பேசுபவர், இலக்கியம் வெளிப்பட சிரமப்பட்டு, கட்டுப்பாடின்றிப் பேசுபவர் மற்றும் பெருமையடிப்பவர் ஆவார் என்றும் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், அல்லாஹ்வின் தூதரே! வழவழவென்று (வீண்பேச்சு) பேசுபவர், இலக்கியம் வெளிப்பட சிரமப்பட்டு பேசுபவர் யார் என்பதை நாம் அறிவோம். 'முதபைஹிகூன்' என்போர் யார்? எனக் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், 'பெருமையடிப்பவர்கள்' (அதாவது, மக்களை இழிவாகக் கருதி, வாய் நிறைய அநாவசியமாக நிறையப் பேசுபவர்கள்) என்று கூறினார்கள்.

explain-icon

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  • நற்குணம் என்பது, நபியவர்களின் அன்பையும், மறுமைநாளில் அவர்களது நெருக்கத்தையும் பெற்றுத் தரும் காரணிகளில் ஒன்றாகும். கெட்டகுணம் அதற்கு நேர் எதிரானது.
  • நற்குணம் என்பது, மனிதர்களுக்கிடையில் அன்பை ஏற்படுத்தும் காரணிகளில் ஒன்றாகும். கெட்டகுணம் அதற்கு நேர் எதிரானது.
  • நற்குணத்தைப் பேணல், பணிவாக நடந்து கொள்ளல், வன்மையின்மை, வீண் சிரமத்தைத் தவிர்த்தல் ஆகியவற்றை ஊக்குவித்தல்.
  • பெருமை, அகம்பாவம், வீண் தம்பட்டம், வீண் சிரமத்தை வெளிப்படுத்தல் போன்ற விதங்களில் பேசுவதைத் தவிர்த்தல்.