குழப்பம், கலவரம், கொலைகள் மற்றும் மக்களின் நிலமைகள் சீரற்றுக் கிடக்கும் காலங்களில், வணக்க வழிபாடுகளில் முனைப்புடன் ஈடுபடுமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வழிகாட்டுகிறார்கள். இத்தகைய காலங்களில் செய்யப்படும் வணக்கங்களுக்கான வெகுமதி நபி ﷺ அவர்களிடம் ஹிஜ்ரத் செய்ததற்குச் சமமான கூலியைப் பெற்றுத் தரும் என அவர்கள் குறிப்பிடுகிறார்கள் ஏனெனில், இவ்வாறான காலங்களில் மக்கள் இபாதத்தை அலட்சியப்படுத்தி விடுவார்கள் அதில் ஈடுபடாமல் பிற விஷயங்களில் மூழ்கி விடுவார்கள் சிலர் மட்டும் அதற்காக நேரம் ஒதுக்கி அதில் நிலைத்திருப்பார்கள்.