அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரல்) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுபவர்களாக இருந்தார்கள் : யா அல்லாஹ்! நான் உன்னிடம், நேர்வழியையும், இறையச்சத்தையும், பத்தினித்தனத்தையும், தன்நிறைவையும் கேட்கின்றேன். சரியானது - இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
explain-icon

விளக்கம்

நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு துஆக் கேட்பார்கள் : யா அல்லாஹ்! நான் உன்னிடம், நேர்வழியையும், (அதாவது, சத்தியத்தை அறிந்து, அதை நடைமுறைப்படுத்தும் நிலையான பாதையை) இறையச்சத்தையும், (அதாவது, கடமைகளை நிறைவேற்றி, தடைகளைத் தவிர்ப்பதையும்) பத்தினித்தனத்தையும், (அதாவது, அனுமதிக்கப்படாத, முறையற்ற சொல், செயற்களை விட்டும் விலகி நிற்கும் நிலையையும்) தன்நிறைவையும் (அதாவது, படைப்புக்களிடம் தேவை காணாமல், தனது ரப்பாகிய அல்லாஹ்விடம் மாத்திரமே தேவை காணும் நிலையை) கேட்கின்றேன்.

explain-icon

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  • நேர்வழி, இறையச்சம், பத்தினித்தனம், தன்னிறைவு ஆகிய இந்தப் பண்புகளின் சிறப்பு. மேலும் அவற்றைக் கடைப்பிடிக்க ஆர்வமூட்டல்.
  • நபியவர்கள் கூட, தமக்குத்தாமே எந்த நலவையோ, தீங்கையோ செய்ய சக்தியற்றவர்கள். அதற்கு சக்திபெற்றவன் அல்லாஹ் மாத்திரமே.
  • நன்மை செய்தல், தீங்கிழைத்தல், படைப்புக்களுக்கு நேர்வழி காட்டல் என அனைத்துக்கும் சக்தி பெற்றவன் அல்லாஹ் மாத்திரமே. நெருக்கமான ஒரு மலக்காலோ, தூதராக அனுப்பப்பட்ட ஒரு நபியாலோ அல்லது வேறு எவராலுமோ அதைச் செய்ய முடியாது.