அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபி (ஸல்) அவர்கள் பின்வரும் வார்த்தைகளைக் கொண்டு துஆக் கேட்பார்கள் : யா அல்லாஹ்! கடன் சுமையை விட்டும், எதிரியின் அடக்குமுறையை விட்டும் மேலும், எதிரிகளின் நகைப்பை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன். சரியானது - இமாம்களான நஸாஈ மற்றும் அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது
explain-icon

விளக்கம்

நபியவர்கள் இங்கு சில விடயங்களை விட்டும் பாதுகாப்புத் தேடியுள்ளார்கள் : யா அல்லாஹ்! கடன் சுமையை (அது என்னை மிகைப்பதையும், அதன் கவலை மற்றும் சோதனைகளையும்) விட்டும் நான் (வேறு யாரிடமும் இல்லாமல்) உன்னிடம் (ஒதுங்கிப்) பாதுகாப்புத் தேடுகின்றேன். அவற்றைத் திருப்பிச் செலுத்திவிட உதவுமாறு நான் உன்னிடம் கேட்கின்றேன். இரண்டாவது : 'எதிரியின் அடக்குமுறையை விட்டும்' (அதாவது, எதிரி என்னை அடக்கி, ஆதிக்கம் செலுத்துவதை விட்டும் பாதுகாப்புத் தேடுகின்றேன். அவனுடைய தொல்லைகளைத் தடுத்து, அவனை வெற்றிகொள்ள உதவுமாறு உன்னிடம் கேட்கின்றேன்.) மூன்றாவது : 'எதிரிகளின் நகைப்பு' அதாவது, முஸ்லிம்களுக்கு ஏற்படும் சோதனைகள் மற்றும் துன்பங்களில் அவர்கள் மகிழ்ச்சியடைவது.

explain-icon

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  • இறைவழிப்பாட்டை விட்டுத் திசைதிருப்பி, கவலைகளைக் கொண்டுவரும், கடன் போன்ற அனைத்தையும் விட்டுப் பாதுகாப்புத் தேடல்.
  • பொதுவாகக் கடனில் பிரச்சனை இல்லை. மாறாக, யாருக்கு அதனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் உள்ளதோ அதுவே பிரச்சனையாகும். இதுதான், 'கடன்சுமை' ஆகும்.
  • ஏனையோரின் நகைப்புக்களுக்கும், குறை கூறல்களுக்கும் இலக்காக்கும் அம்சங்களை மனிதன் தவிர்க்க வேண்டும்.
  • காபிர்களுக்கு முஸ்லிம்கள் மீதுள்ள விரோதத்தையும், முஃமின்களுக்கு சோதனைகள் ஏற்படும் போது அவர்கள் சந்தோசப்படுவதையும் உணர்த்துதல்.
  • ஒரு மனிதனுக்கு ஏற்பட்டுள்ள சோதனையைப் பார்த்து எதிரிகள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது, அந்த சோதனையை விட அவனுக்குப் பாரமாக இருக்கும்.