நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தமது மரணத்திற்கு மூன்று தினங்களுக்கு முன்னர் கூறுவதை தான் செவிமடுத்ததாக ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளார்கள் : உங்களில் எவரும் அல்லாஹ்வைப் பற்றிய நல்லெண்ணம் கொண்ட நிலையிலேயே தவிர மரணிக்கவேண்டாம். சரியானது - இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
explain-icon

விளக்கம்

ஒரு முஸ்லிம் அல்லாஹ்வைப் பற்றி நல்லெண்ணம் கொண்ட நிலையிலேயே மரணிக்க வேண்டும் என நபியவர்கள் இங்கு வலியுறுத்துகின்றார்கள். அதாவது, மரணத் தருவாயில், அல்லாஹ் தன்னை மன்னித்து அருள் புரிவான் என்ற நல்ல எதிர்பார்ப்பை அவர் கூடுதலாக வைக்க வேண்டும். ஏனெனில், இறைவன் பற்றிய பயம் என்பது அமல்களை சிறப்பாகச் செய்வதற்கு அவசியமானது. ஆனால், இது அமல்களுக்கு உரிய நிலைமை அல்ல. இங்கு எதிர்பார்க்கப்படுவது அருளை ஆதரவு வைப்பதே!

explain-icon

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  • தனது சமுதாயத்திற்கு நல்ல வழிகளைக் காட்டுவதில் நபியவர்கள் ஆர்வமாக இருந்துள்ளமையும், எல்லா நிலைகளிலும் அவர்களோடு இரக்கமாக இருந்துள்ளமையும். எந்தளவுக்கெனில், தனது மரணப் படுக்கையிலும், தனது உம்மத்திற்கு நன்மை நாடி, வெற்றிக்கான வழிகளை காட்டிக் கொடுக்கின்றார்கள்.
  • தீபீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள், 'இப்போது நல் அமல்களை செய்யுங்கள். அதன் மூலமே மௌத்தின் போது அல்லாஹ்வைப் பற்றி உங்களுக்கு நல்லெண்ணம் வரும். மரணத்திற்கு முன்னரே யாரது அமல்கள் சீர்கெட்டுப் போய் விடுகின்றனவோ, மௌத்தின் போது அவரது எண்ணம் கெட்டுவிடும்.
  • ஓர் அடியானின் முழுமையான நிலை என்னவென்றால், பயமும், ஆதரவும் சமநிலையாக இருப்பதுடன், அன்ப மிகைத்திருப்பதாகும் . அன்புதான் வாகனம். ஆதரவு அதன் எரிபொருள். அச்சமே அதன் ஓட்டுனர். அல்லாஹ்வே தனது உபகாரத்தாலும், அருளாலும் கொண்டுபோய் சேர்க்கக்கூடியவன்.
  • மரண தருவாயில் இருக்கும் ஒருவருக்கு நெருக்கமாக இருப்பவர், அவரிடம் அல்லாஹ்வைப் பற்றி நல்லெண்ணமும், ஆதரவும் வைக்கும் பகுதியை அழுத்திக் கூறவேண்டும். ஏனெனில், இந்த ஹதிஸை நபியவர்கள் தாம் மரணிக்க மூன்று தினங்களுக்கு முன்னர் கூறியதாகவே உள்ளது.
explain-icon

மேலதிக விபரங்களுக்கு