அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறியதாக, அன்-நவ்வாஸ் இப்னு ஸிம்ஆன் அல்-அன்சாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள்: 'நன்மை என்பது நற்குணமாகும், தீமையென்பது உனது மனதில் உருத்தலை ஏற்படுத்தி, மக்கள் அதனை -பார்ப்பதை –கண்டுககொள்வதை நீ வெறுப்பதாகும்.' வாபிஸா இப்னு மஃபத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்தேன், அப்போது நபியவர்கள் 'நன்மை தீமை பற்றி நீ கேட்பதற்காக வந்துள்ளீர் அல்லவா' என்று கேட்க நான் ஆம் என்று கூறினேன். அதற்கு நபியவர்கள் ' உனது உள்ளத்திடமே தீர்ப்புக்கேட்டுக்கொள். நன்மை என்பது மனத்திற்கும் உள்ளத்திற்கும் நிம்மதியை தரக்கூடியது. தீமை என்பது மனதை உருத்தி உள்ளத்தில் தடுமாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது. மக்கள் அது குறித்து உமக்கு தீர்ப்புக் கூறியிருந்தாலும் கூட உனது மனம் தயங்குவது பாவத்தைக் காட்டும்' சரியானது - முதலாம் ஹதீஸ்: இதை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார், இரண்டாம் ஹதீஸ்: இதை இமாம்களான அஹ்மத், தாரமீ ஆகியோர் பதிவு செய்துள்ளனர்
explain-icon

விளக்கம்

இந்த ஹதீஸில் நன்மை (புன்னியம்-) மற்றும் பாவம் குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். நன்மையான குணங்களில் மிகவும் உயர்ந்தது அல்லாஹ்வை பயப்படுவதன் மூலம் அல்லாஹ்வுடன் சிறந்தமுறையில் நடத்தல். அத்துடன் சிரமத்தைத் தாங்கிக்கொள்ளுதல், கோபமின்மை, முகமலர்ச்சியுடன் இருத்தல், கனிவான பேச்சு, உறவுகளைப் பேணுதல், பணிவு, கட்டுப்படுதல், மென்மையை கடைப்பிடித்தல், அழகிய முறையில் உறவாடுதல், தோழமை கொள்ளுதல் போன்றவற்றை கடைப்பிடித்து மனிதர்களுடன் நடப்பது நன்மை சார்ந்த விடயமாகும். பிர் என்பது இதயத்திற்கு நிம்மதியை ஏற்படுத்துவதாகும். பாவம் மனித உள்ளத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தாது ஒரு வகை தயக்கத்தையும் தடுமாற்றத்தையும் ஏற்படுத்துவது. இதன் விளைவாக உள்ளத்தில் சந்தேகமும், குறித்த விடயம் தவறு என்பதால் அது குறித்து மனதில் பயமும்; ஏற்படுவதோடு, குறித்த விடயம் அசிங்கமானது என்பதால் மனிதர்களில் கௌரவமானவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் தெரிந்து கொள்வதை மனம் விரும்பாது. ஏனெனில் மனமானது இயல்பில் நல்ல விடயங்களை பிறர் காண்பதையே விரும்புகிறது. இதனால், பிறர் கண்டுகொள்வதை விரும்பாத, மனம் வெறுக்கின்ற செயற்பாடுகளாயின் அது பாவமாகும். அதில் எவ்வித நன்மையும் கிடையாது. உம்மிடம் இருக்கும் விடயம் பற்றி மக்கள் நல்லது என்று தீர்ப்பு கூறினும், அது பற்றிய சந்தேகமும் குற்ற உணர்வும் உம் மனதில் இருக்குமாயின் அது பாவமான ஒரு விடயமாகும். மக்கள் தீர்ப்பு ஒரு போதும் ஒரு சந்தேகமான ஒருவிடயத்தை சரிபடுத்தமாட்டாது. சில வேளை தீர்ப்பு கூறுபவர் குறித்தவிடயம் பற்றி போதிய அறிவின்றி தீர்ப்பு கூறிவிடுவார். குறித்த தீர்ப்பானது மார்க்க ஆதரத்தின் அடிப்படையில் இருப்பின் தீர்ப்புக்கோரியவரின் மனம் திருப்தியடையவில்லையெனில் மீண்டும் அவரிடம் செல்வது கடமையாகும்.

explain-icon

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  • நற்குணங்களில் ஆர்வமூட்டல். ஏனெனில் நற்குணங்கள் நன்மையின் மிக முக்கிய பகுதிகளாகும்.
  • சத்தியம், அசத்தியம் ஆகியவற்றை பிரித்தறிவது ஒரு முஃமினுக்கு குழப்பமாக இருக்கமாட்டாது. மாறாக, அவனது உள்ளத்தில் உள்ள ஒளியினால் அவன் சத்தியத்தை அறிந்துகொள்வான். அசத்தியத்தை விட்டும் விலகிச் சென்றுவிடுவான்.
  • மனபதற்றம், தடுமாற்றம், மக்கள் பார்த்து விடுவார்களோ என்ற பயம் என்பவை, பாவத்தின் அடையாளங்களாகும்.
  • ஸின்தீ அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்: இது, மக்களால் இரண்டிலொன்றைத் தெளிவாக அறிந்துகொள்ளமுடியாத குழப்பமான விடயங்களை மாத்திரமே குறிக்கும். அவ்வாறில்லாவிட்டால், தெளிவான ஆதாரம் இல்லாத போது, அதற்கெதிரான நன்மையே ஏவப்படும். அவ்வாறுதான், தடுக்கப்பட்டவை அனைத்தும் பாவமாகும். எனவே, அவற்றில் உள்ளத்திடம் தீர்ப்புக் கேட்டு, மனஅமைதியடைய வேண்டிய அவசியம் இல்லை.
  • இந்த ஹதீஸில் குறிக்கப்படுபவர்கள் ஈடேற்றமான இயல்பைக் கொண்டவர்களே தவிர, தனது மனோஇச்சையால் ஊட்டப்பட்டவற்றைத் தவிர, எந்தவொரு நன்மையையோ, பாவங்களையோ பிரித்து அறிந்துகொள்ளத் தெரியாத தலைகீழான உள்ளங்களைக் கொண்டவர்கள் அல்ல.
  • தீபீ அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்: 'இந்த ஹதீஸில் 'பிர்' என்பதற்கு பல்வேறு விளக்கங்கள் கூறப்படுவதாகச் சொல்லப்படுகின்றது. ஒரு இடத்தில், 'மனத்திற்கும், உள்ளத்திற்கும் அமைதியயைத் தருபவை' என்றும், இன்னொரு இடத்தில் 'ஈமான்' என்றும், இன்னுமொரு இடத்தில், 'உம்மை அல்லாஹ்வின் பால் நெருக்கமாக்கி வைப்பவை' என்றும், விளக்கப்பட்டுள்ளது. இங்கு 'நற்குணம்' என விளக்கப்பட்டுள்ளது. நற்குணம் என்பது, 'நோவினையை சகித்துக்கொள்ளல், கோபத்தைக் குறைத்தல், முகமலர்ச்சி, நல்ல வார்த்தைகள்' என்று விளக்கப்பட்டுள்ளது. இவையனைத்தும் கருத்தில் ஒன்றுக்கொன்று சமீபமானவை.
explain-icon

மேலதிக விபரங்களுக்கு