நபி (ஸல்) அவர்கள் தமது மரண தருவாயில் இருக்கும் வேளைகளில் தமது உம்மத்திற்காக அதிகம் செய்த வஸிய்யத்தாக பின்வரும் விடயங்களே காணப்பட்டன: "தொழுகையைப் பற்றிக் கொள்ளுங்கள். அதனைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். மேலும் அவற்றில் பராமுகமாக இருந்து விடாதீர்கள். இதேபோன்று, உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட, ஆண், பெண் அடிமைகளது கடமைகளை சரியாக நிறைவேற்றி, அவர்களை சிறப்பாகக் கவனித்துக் கொள்ளுங்கள்." இவ்வாறே, உயிர் பிரிய அண்மித்து, அவர்களால் எதையும் தெளிவாகப் பேசிக்கொள்ள முடியாத நிலையிலும் அதையே கூறிக் கொண்டிருந்தார்கள்.