ஒரு முஸ்லிம், தன்னால் சரியான நிலையை அறிந்து கொள்ளமுடியாத ஒரு விடயத்தைச் செய்ய நாடினால், அவர் இஸ்திகாராவுடைய தொழுகையைத் தொழுமாறு மார்க்கம் காட்டியுள்ளது. அதாவது, நபி (ஸல்) அவர்கள், அல்குர்ஆனின் ஒரு ஸூராவைக் கற்றுத் தருவது போன்று, எல்லா விடயங்களிலும் நன்மையைக் கேட்பதையும் கற்றுத் தருவார்கள். கடமையல்லாத இரு ரக்அத்கள் தொழுதுவிட்டு, பின்வருமாறு கூறி அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும் : 'யா அல்லாஹ்! அனைத்தையும் அடைவளைத்துள்ள விசாலமான (உனது அறிவைக் கொண்டு) இரு விடயங்களில் சிறந்ததை அடைய பாக்கியம் செய்யுமாறு கேட்டு, (உன்னிடம் நன்மையைக் கேட்கின்றேன். உன்னுடைய சக்தியைக் கொண்டு உன்னிடம் ஆற்றலைக் கேட்கின்றேன்.) என்னைச் சக்தியுள்ளவனாக ஆக்குமாறு கேட்கின்றேன். ஏனெனில், உன்னைக் கொண்டே தவிர, எதையும், தவிர்க்கவும், செய்யவும் எந்த சக்தியும் எனக்கு இல்லை. (உன்னுடைய மகத்தான) விசலமான (பேருபகாரத்தில்) பேருதவி (இருந்து உன்னிடம் கேட்கின்றேன்.) ஏனெனில், எனது உதவி நீ செய்யும் உபகாரமே தவிர, எந்த அருட்கொடைகளிலும் நீ யாருக்கும் கடமைப்பட்டவன் அல்ல. (நீயே) அனைத்துக்கும் (ஆற்றல் மிக்கவன்.) நானுமோ இயலாதவன், பலவீனமானவன். (என்னிடம்) உனது உதவியைக் கொண்டே தவிர, எந்தவொன்றுக்கும் (ஆற்றல் கிடையாது. நீயே) வெளிப்படையானவை, மறைவானவை, நன்மை, தீமை என அனைத்தையும் முழுமையாக அறிந்துள்ள, உனது விசாலமான அறிவைக்கொண்டு (அறிந்தவன். நான்) உனது அருளையும், நேர்வழியையும் கொண்டே தவிர எதையும் (அறியமாட்டேன்.) (மறைவானவற்றை அதிகம் அறிந்தவன் நீயே!) ஒட்டுமொத்த அறிவும், தடையில்லாமல் செயற்படும் அதிகாரமும் உன்னிடமே உள்ளது. ஏனையோருக்கு அவற்றில் நீ விதித்த, சக்தியை வழங்கிய அளவு மாத்திரமே உண்டு. பின்பு முஸ்லிம் தனது தேவையைக் குறித்துக் கூறி, இவ்வாறு தனது இறைவனிடம் கேட்பார். (யா அல்லாஹ்!) எனது விவகாரத்தை நான் உன்னிடம் பொறுப்புச் சாட்டிவிட்டேன். உனது அறிவில் (இந்த விடயம்,) உதாரணமாக இந்த வீட்டை வாங்குவது, அல்லது இந்த வாகனத்தை வாங்குவது, அல்லது இந்தப் பெண்ணைத் திருமணம் செய்வது போன்றவை இந்த விடயம் உனது முந்திய அறிவில், எனது விடயங்களின் பிடிகயிறாகிய (எனது மார்க்கத்திற்கும்,) இவ்வுலக (வாழ்க்கைக்கும் எனது இறுதி முடிவுக்கும்)எனது விவகாரங்களின் இறுதி நிலைக்கும் - (அல்லது எனது உடனடியான, தாமதமான விடயங்களுக்கும்) அதாவது, உலகிலும், மறுமையிலும் (- நன்மையானதாக இருந்தால், அதை எனக்கு விதித்துவிடுவாயாக.) எனக்கு அதனை இலகுபடுத்தி, நிறைவேற்றித் தா! (மேலும் அதனை எனக்கு இலகுபடுத்தி விடுவாயாக! பின்பு எனக்கு அதில் பரகத் செய்து) மேலும் நன்மைகளை அதிகப்படுத்தித் (தருவாயாக!) அல்லாஹ்வே! (இந்த விடயம், எனது மார்க்கத்திற்கும், வாழ்க்கைக்கும், எனது இறுதி முடிவுக்கும் - அல்லது எனது உடனடியான, தாமதமான விடயங்களுக்கும் - தீமையானதாக இருந்தால், என்னை விட்டும் அதைத் திருப்பி விடுவாயாக! மேலும், அதையும் என்னை விட்டுத் திருப்பி விடுவாயாக! நன்மை - எங்கிருந்த போதிலும் - அதை எனக்கு விதித்து விடுவாயாக! பின்பு எனக்கு அதில்) மேலும் நான் விரும்பும், வெறுக்கும் உனது அனைத்து விதிகளிலும் (திருப்தியைத் தருவாயாக!).