இங்கு நபியவர்கள், முஸ்லிம்களே! உங்களில் யாராவது, உடலில் நோய்கள் அற்று ஆரோக்கியத்துடனும், தன்னிலும், தனது குடும்பம் மற்றும் தான் செல்லும் பாதைகளிலும் அச்சமற்று பாதுகாப்புடனும், அன்றைய தினத்துக்கு அவசியமான ஹலாலான உணவு கையில் இருக்கும் நிலையிலும் காலைப் பொழுதை அடைகின்றாரோ, அவர் முழு உலகமும் வழங்கப்பட்டதைப் போன்றவர் என்று அறிவிக்கின்றார்கள்.