மனிதன் பலவீனமாகப் படைக்கப்பட்டுள்ளதாலும், தனது எஜமான் ஏவியதை எடுத்து நடப்பதிலும், விலக்கியதைத் தவிர்ந்து கொள்வதிலும் அவனுக்குக் கட்டுப்படுவதிலும் பாவம் செய்யாமல் அவனால் இருக்க முடியாது. எனினும் தவ்பாவின் பாவமீட்சி வாயிலை அல்லாஹ் தனது அடியார்களுக்காகத் திறந்து வைத்துள்ளான். தவறிழைப்பவர்களில் அதிகம் தவ்பாச் செய்வோரே சிறந்தவர்கள் எனவும் அவன் அறிவித்துள்ளான்.